தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

என் ஆயுட்காலம் வரை அரசியலில் இருப்பேன்: பிறந்தநாள் விழாவில் திருநாவுக்கரசர் பேச்சு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தனது 75வது பிறந்தநாள் பவள விழாவை நேற்று கொண்டாடினார். பிறந்தநாள் விழா, முத்தமிழ் களஞ்சியம் கலை இலக்கியப் பேரவையின் தொடக்க விழா தி.நகரில் நடந்தது. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இ.வி.கே.எஸ்.இளங்கோவன், கவிஞர் முத்துலிங்கம், வரலாற்று ஆசிரியர் மருதுமோகன் உள்ளிட்டோர் வாழ்த்தினர். முத்தமிழ் களஞ்சியம் கலை இலக்கியப்பேரவையின் பொதுச்செயலாளர் முத்துக்கண்ணன் அறிமுக உரையாற்றினார். முன்னாள் தலைமை பொறியாளர் கே.விஜயகுமார் வரவேற்றார். திருநாவுக்கரசரின் மகன் அன்பரசன் நன்றி கூறினார். திருநாவுக்கரசர் பேசுகையில், "எம்.ஜி.ஆர். காலம் தொட்டு 50 ஆண்டு காலமாக அரசியல் தவிர வேறு எந்த தொழிலையும் செய்யாமல் இருந்து வருகிறேன்.
Advertisement

என் ஆயுள் காலம் வரை அரசியலில் தான் ஈடுபட இருக்கிறேன் " என்றார். விழாவில், ராமச்சந்திரன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர், காங்கிரஸ் துணை தலைவர் கோபண்ணா, பொதுச்செயலாளர் தளபதி எஸ்.பாஸ்கர், எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், திமுக வர்த்தகரணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர். சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் ஆளுயர மாலை அணிவித்தார். கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ராகுல்காந்தி, சபாநாயகர் ஓம்பிர்லா தொலைபேசி யில் வாழ்த்து தெரிவித்தனர்.

 

Advertisement

Related News