தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகரீகத்தின் எல்லையை மீறுகிறது சீமான் பேசும் அரசியல் அவருக்கே எதிராக முடியும்: திருமாவளவன் காட்டம்

Advertisement

அவனியாபுரம்: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு வழங்கிய அனுமதியை கண்டித்து, மதுரை மாவட்டம், மேலூரில் விசிக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திருமாவளவன் பங்கேற்றார். முன்னதாக திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: நீண்ட காலமாக சங் பரிவார் அமைப்புகள் இந்த சதி வேலைகளை செய்து வரும் சூழலில், தற்போது மொழி மற்றும் இனத்தின் பெயரால் அரசியல் செய்யும் அமைப்புகளும் பெரியாரை குறி வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சீமானின் பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறியதாக, குதர்க்கவாதமாக உள்ளது.

அவர் பேசுகிற அரசியலுக்கு அது அவருக்கே எதிராக முடியும். தேசிய அளவில் மதவெறி தேசியம் குறித்து பாஜ உள்ளிட்ட சங் பரிவார்கள் பேசுகிறார்கள். மதவெறி தேசியம் என்பதுதான் உண்மையான எதிரி. அதை விடுத்து தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் தனது இறுதி மூச்சு வரை தீவிர களப்பணியாற்றிய, சமூகநீதியின் தேசிய அடையாளமாக உள்ள தந்தை பெரியார் அவர்களை கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல. இந்த போக்கை சீமான் கைவிட வேண்டும். அவரது பேச்சுக்களை அண்ணாமலையும், அவர் சார்ந்துள்ள சங் பரிவார் அமைப்புகளும் மட்டுமே ஆதரிக்கும்.

இவ்வாறு கூறினார்.

 

Advertisement