தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசியலில் நடிப்பதற்கு விஜய் அமித்ஷாவுடன் ஒப்பந்தம்: சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

நெல்லை: நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நேற்று அளித்த பேட்டி: கரூர் சம்பவத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருணை உள்ளம் கொண்டவர் என்பதை நிரூபித்துள்ளார். பாதிப்பு சம்பவம் கேள்விப்பட்டவுடன் நள்ளிரவு 1 மணிக்கும் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். உடனடியாக நிவாரணம் அறிவித்தார். ஆனால் இதுபோன்ற கொடூர சம்பவத்திற்கு காரணமான விஜய் இரவோடு இரவாக பனையூருக்கு சென்று பதுங்கிக் கொண்டார். தலைவனாக இருந்தால் நெஞ்சில் உறுதி வேண்டும். ஈவு-இரக்கம் இருக்க வேண்டும். அது இல்லாமல் விஜய் யாருக்கு வந்த விதியோ என்று சென்றுவிட்டார்.

Advertisement

அமித்ஷாவும், புஸ்ஸி ஆனந்தும் நண்பர்கள். அவரது ஆலோசனையின் படியே இந்த கட்சியை விஜய் ஆரம்பித்தார். தற்போது கரூரில் கூட்டம் நடந்தபோது அதில் பங்கேற்க வந்த விஜய், அந்த கட்சியின் நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒன்றரை மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டு, வேண்டுமென்றே தாமதமாக பிரசார இடத்திற்கு வந்தது தான் இதுபோன்ற விபத்துக்கு காரணம். பகலில் பிரசாரத்திற்கு அனுமதி கேட்டுவிட்டு, எதற்காக மின்விளக்கு எல்லாம் அந்த இடத்தில் பொருத்தினார்கள்?.

அவர்கள் 3 பேரும் ஒரு சதியோடுதான் அந்த இடத்திற்கு வந்துள்ளனர். இதுவரை சினிமாவில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த விஜய், தற்போது அரசியலிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இதற்காக அவர் அமித்ஷாவோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ளார். கரூர் சம்பவத்தில் அப்பாவி மக்கள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். எங்களுக்கு யாருடனும் ரகசிய உறவு கிடையாது. இந்த அரசு யாருக்கும் அச்சப்படாத அரசு. யாரையும் தப்ப விடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement