தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சதி பண்ணி தோக்கடிச்சுட்டாங்க ராஜேந்திர பாலாஜி கண்ணீர் விட்டு கதறல்

சிவகாசி: ‘செத்தாலும் சாவேன். அதிமுகவை காட்டிக் கொடுக்கவே மாட்டேன்’ என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கதறி அழுதபடி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் ஆக. 8ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளவுள்ள பிரசாரப் பயணம் தொடர்பான ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: பணமோசடி வழக்கில் என்னை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அதிமுகவிற்கு எதிராக காவல்துறை உயரதிகாரிகள் பிரமாண பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தரச் சொல்லி மிரட்டினர். தனிமைச் சிறையில் அடைத்து, மிரட்டி பணிய வைக்க நினைத்தார்கள். ஆனால் நான் எதற்கும் கட்டுப்படவில்லை. செத்தாலும் சாவேன்... (அப்போது அவர் கண்ணீர் சிந்தியபடி பேசினார்) அதிமுகவை காட்டிக் கொடுக்கவே மாட்டேன்.
Advertisement

ராஜபாளையம் தொகுதியில் என்னை சதி செய்து தோற்கடித்தனர். எந்த சாதிக்கும், மதத்துக்கும் நான் எதிரானவன் அல்ல. அனைத்து சமூக மக்களும் என்னிடம் உறவுமுறையோடுதான் பழகுகின்றனர். என்னை பற்றி சமூக வலைதளங்களில் வரும் உண்மைக்கு புறம்பான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். பாஜ.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் சிறுபான்மை மக்கள் பல ஆயிரம் பேர் என் மீது நம்பிக்கை கொண்டு உள்ளனர். அவர்கள் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Related News