தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெளிமாநில வாக்காளர்களை சேர்க்கவே எஸ்.ஐ.ஆர் பணி: வைகோ குற்றச்சாட்டு

திருச்சி: ‘வெளிமாநில வாக்காளர்களை சேர்க்கவே எஸ்.ஐ.ஆர் பணி’ என்று வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில் வரும் ஜனவரி 2ம்தேதி சனாதன சக்திகளின் பிரித்தாளும் சூழ்ச்சி குறித்தும், போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் சமத்துவ நடைபயணத்தை மதிமுக பொது செயலாளர் வைகோ துவக்குகிறார். இதையொட்டி திருச்சியில் நடைபயணத்தில் பங்கேற்கும் மதிமுக தொண்டர்களை வைகோ நேற்று தேர்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: நடைபயணங்களில் நான் அரசியல் கட்சிகளை விமர்சித்தது கிடையாது. ஆனால் ஜனவரி 2ம்தேதி திருச்சியில் துவங்கவுள்ள நடைபயணத்தில் சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு திராவிட மாடல் ஆட்சி தொடர ஆதரவு தர வேண்டுமென பொதுமக்களிடம் வேண்டுகோள் வைக்கவுள்ளேன். அரசு தன் இரும்புக்கரம் கொண்டு போதைப்பொருளை ஒழிக்க வேண்டும்.

Advertisement

எஸ்ஐஆர் என்பது மிகப்பெரிய மோசடி. இருக்கும் வாக்காளர்களை நீக்கி விட்டு வெளிமாநில வாக்காளர்களை சேர்க்கவே இந்த ஏற்பாடு. எஸ்ஐஆருக்கு எதிராக நாங்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். வரும் வெள்ளி அல்லது திங்கட்கிழமை வாதாட எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்போது எங்களது வாதத்தை முன் வைப்போம். என் பாட்டனார் சேர்த்த கோடிக்கணக்கான சொத்துகளை பொது வாழ்வுக்கு வந்த பின் இழந்தேன். அதை இழப்பாக நான் கருதவில்லை. இவ்வாறு வைகோ கூறினார்.

* ‘நரி ஊளையிட்டால் பதில் கூற முடியாது’

‘என் நாணயம் குறித்து எதிர்க்கட்சிகள் கூட வைக்காத குற்றச்சாட்டை மல்லை சத்யா வைத்துள்ளார். நான் ஒரு இலக்கை நோக்கி பயணிக்கிறேன். அந்த பயணத்தில் நரி ஊளையிட்டால் அதற்கு நின்று பதில் கூற முடியாது’ என்று வைகோ தெரிவித்தார்.

Advertisement