தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மோடியின் 400 கோஷம் பின்னடைவுக்கு காரணம்: ஏக்நாத் ஷிண்டே கருத்து

Advertisement

மும்பை: பாஜகவின் தேர்தல் பிரசாரத்தில் 400-ஐ தாண்டும் என்ற முழக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது என்று மகாராஷ்டிரா முதல்வர் அதிருப்தி தெரிவித்தார். மகாராஷ்டிர மாநில முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், ‘நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெல்வோம் என்று மோடி முழங்கியதால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் இழப்பை சந்தித்துள்ளது.

இந்த முழக்கம் தீவிரமானதால், இந்திய அரசியலமைப்பை மாற்றுவார்களா?, இட ஒதுக்கீடு ரத்து செய்வார்களா? என்ற அச்சம் மக்களிடையே எழத் தொடங்கியது. ஆனால், முதல் கட்டத் தேர்தலுக்குப் பிறகு இந்த முழக்கம் மீதான விவாதம் நிறுத்தப்பட்டது. 400-ஐ தாண்டும் என்ற முழக்கத்தை வைத்து எதிர்க்கட்சிகள் உருவாக்கிய பொய்யான கதையின் மூலமாக சில இடங்களில் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

மகாராஷ்டிராவிலும் அதன் சேதத்தை சந்திக்க நேரிட்டது’ என்றார். மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 7 இடங்களில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும், 9 இடங்களில் பாஜகவும், ஒரு இடத்தில் மட்டும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசும் வெற்றி பெற்றன. எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ் 13 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 9 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சை ஒருவரும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement