தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எம்ஜிஆரின் படத்தை வைத்து விஜய் படம்தான் காட்ட முடியும்: செல்லூர் ராஜூ பதிலடி

மதுரை: எம்ஜிஆர் படத்தைக் காட்டி அதிமுக தொண்டர்கள் யாரையும் நடிகர் விஜய் பிரிக்க முடியாது என மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை விளாங்குடி பகுதியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார். அவரிடம், ‘‘எடப்பாடி பழனிசாமி பிரசார வாகனத்தில் இருந்த அதே அளவு எம்ஜிஆர் படத்தை, விஜய் தனது பிரசார வாகனத்திலும் பயன்படுத்துகிறாரே’’ என கேட்டனர். அதற்கு செல்லூர் ராஜூ பதிலளித்ததாவது: எம்ஜிஆரின் கொள்கைகளும் அவர் உருவாக்கிய கட்சியும் இருக்கிறது. 53 ஆண்டு காலம் கட்சி நடந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி 3வது தலைமுறைக்கு தலைமை ஏற்றுள்ளார். எம்ஜிஆர் படத்தை, சினிமாவில் படம் காட்டுவது போல் வேண்டுமென்றால் விஜய் காட்டிக் கொள்ளலாம், அதிமுக தொண்டர்களை அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாது. விஜய்க்கு எங்கள் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்வார். புயல் மையம் கொண்டுள்ளது எனச் சொல்வார்களே, அதைப்போல எடப்பாடி பழனிசாமி சென்ற இடங்களில் மக்கள் மையம் கொண்டுள்ளனர். இவ்வாறு கூறினார்.

Advertisement

Advertisement

Related News