தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் திராவிட வெற்றிக் கழகம் பெயரில் கட்சி தொடங்கினார் மல்லை சத்யா: 7 நட்சத்திரங்களுடன் கூடிய கொடியும் அறிமுகம்

சென்னை: மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். மேலும், 7 நட்சத்திரங்களுடன் கூடிய கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது. வைகோவின் விசுவாசமிக்க தொண்டனாக 30 ஆண்டுகளுக்கும் மேல் அரசியலில் பயணித்தவர் மல்லை சத்யா. இடையில், மதிமுகவில் வைகோவின் மகன் துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதையடுத்து, மல்லை சத்யாவை துரோகி என்று கூறிய வைகோ, கடந்த செப்டம்பர் 8ம் தேதி அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக வைகோ அறிவித்தார்.

Advertisement

தனது ஆதரவாளர்களுடன் பலகட்ட ஆலோசனைகளை சத்யா நடத்தினார். இதன்பின் புதியக் கட்சியை தொடங்க உள்ளதாக மல்லை சத்யா அறிவித்தார். இந்நிலையில் புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பதற்காக சென்னை அடையாறில் தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மல்லை சத்யாவின் தலைமையில் நடந்த விழாவில் தனது புதிய கட்சியின் பெயரை திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருப்பூர் துரைசாமி அறிவித்தார். அதாவது, ‘திராவிட வெற்றிக் கழகம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 7 நட்சத்திரங்களுடன் கூடிய கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது. இக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மல்லை சத்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* மல்லை சத்யாவின் திவெக

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை போல் கட்சியின் பெயர் அமைந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தை சுருக்கமாக தவெக என்று அழைக்கும் நிலையில், இந்த கட்சி சுருக்கமாக திவெக என்று அழைக்கப்படும். ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் நடத்தி வரும் நிலையில், திராவிட வெற்றிக் கழகம் என்று மல்லை சத்யா தொடங்கி இருப்பது தமிழக அரசியல் களத்தில் விவாதமாகி இருக்கிறது.

Advertisement