தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாஜ தலைவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் நயினார் குறித்து ஓபிஎஸ் சொன்னதை ஏற்க மாட்டோம்: பொங்கும் தமிழிசை

சென்னை: தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசை பார்த்து தினம் தினம் போராட்டம் என்று கூறுகிறார். தினம் தினம் போராட்டம் நடத்தும் அளவுக்கு, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு என்ன அநீதியை இழைத்து விட்டது? ராகுல் காந்தியை என்ன கூறுவது என்றே தெரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு, டிரம்ப் கூறியது போல், இந்தியாவில் பொருளாதாரம் செத்துப் போய்விட்டது என்று கூறினார். இப்போது இந்திய தேர்தல் ஆணையம் செத்துப் போய்விட்டது என்று கூறுகிறார். இதைப்போல் எதை எடுத்தாலும் செத்துப் போய்விட்டது, செத்துப் போய்விட்டது என்று ராகுல் காந்தி கூறுகிறாரே? ராகுல் காந்தி இப்போது, அருண் ஜெட்லி என்னை மிரட்டினார் என்று, அவர் இறந்த பின்பு இப்போது கூறுகிறார். அருண் ஜெட்லி, ஆவியாக வந்து ராகுல் காந்தியை மிரட்டினாரா, என்னதான் நடக்கிறது என்று புரியவில்லை.

பாஜ தலைவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள். எனவே, நயினார் நாகேந்திரன் குறித்து, ஓபிஎஸ் சொல்லி இருக்கும் கருத்தை, நாங்கள் ஏற்க மாட்டோம். அதோடு இந்த விவகாரத்தில் நான் இதற்கு மேல் எதுவும் பேச விரும்பவில்லை. வாழ்நாள் முழுவதும் எதிர்த்து அரசியல் நடத்தி வந்த, ஒரு கட்சித் தலைவரை சென்று பார்க்கின்றனர். அந்தக் கட்சியில் சேர்ந்து விடுகின்றனர். அதிமுக பாஜவுடன் கூட்டணி வைத்தது பிடிக்கவில்லை. எனவே இவ்வாறு செய்கிறோம் என்று கூறுகின்றனர். இவ்வாறு தமிழிசை கூறினார்.

Related News