தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தன்னை மதிக்காத பாஜ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும்: பாஜவை வளர்க்க கூடிய எந்த கூட்டணியும் தமிழக மக்களுக்கு நன்மை தராது

சென்னை: தன்னை மதிக்காத பாஜ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். பாஜவை வளர்க்க கூடிய எந்த கூட்டணியும் தமிழக மக்களுக்கு நன்மை தராது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் தமிழகம் வந்தார். பிரதமர் மோடியை திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பல்வேறு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்தித்தனர். இதற்கிடையே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார்.
Advertisement

இதுதொடர்பான அந்த கடிதத்தில், “ தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனி மரியாதை மற்றும் பாக்கியமாக இருக்கும்\” என்று ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். ஆனால் பிரதமர் மோடியை சந்திக்க ஓ,பன்னீர்செல்வத்துக்கு அனுமதி வழங்கவில்லை. ஓபிஎஸ் கடிதம் எழுதியும் பிரதமர் அவரை சந்திக்காமல் தவிர்த்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. ஏற்கெனவே அமித்ஷா 2 முறை தமிழகம் வந்தபோதும் அவரை சந்திக்க ஓபிஎஸ்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை அவர் வெளிப்படையாகவே கூறியிருந்தார். இதேபோல் இதனுடன் சேர்த்து பிரதமர் மோடி 2 முறை தமிழகம் வந்தபோதும் ஓபிஎஸ்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் உள்ள மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டி:

தன்னை மதிக்காத பாஜ கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் வெளியேற வேண்டும். ஓபிஎஸ்சை பாஜ புறக்கணிக்கிறது. அதை அவர் வரப்பிரசாதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பாஜவை வளர்க்க கூடிய எந்தக் கூட்டணியும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை தராது. அந்த கூட்டணியில் ஓபிஎஸ்சுக்கு நன்மை இல்லை. மதியாதார் வாசலை மிதிக்க மாட்டேன் என கும்பிடு போட்டு வெளியே வருவதே நிம்மதி. தேசிய ஜனநாயக கூட்டணியே (என்டிஏ) ஒரு ஆபத்தான கூட்டணி. விஜய்-ஓ.பன்னீர் செல்வம் சேர்ந்தால் அரசியலை நடத்த முடியும், தென்மாவட்டங்களில் அதுதான் பலம். சட்டசபை ேதர்தலில் அதிமுகவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடமே இல்லை. பாதியிலேயே போய்விடும். தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை நிச்சயம் வடிகட்டி விடுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

Related News