தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாஜ.விற்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்: தேசிய தலைவர் நட்டா அறிவிப்பு

சென்னை: சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாஜவிற்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே எஞ்சியுள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக-பாஜ கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் பாஜ அணியில் ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோர் இருந்தனர்.

Advertisement

பாஜ தொடர்ந்து புறக்கணித்ததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓபிஎஸ், டிடிவி.தினகரன் அறிவித்தனர். அதே நேரத்தில் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தேர்தலில் போட்டியிடுவது தற்கொலைக்கு சமம் என்று டி.டி.வி.தினகரன் கூறிவிட்டார். இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜ சார்பில் தேர்தல் பொறுப்பாளர் மற்றும் இணை பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான, அறிவிப்பை பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று வெளியிட்டார்.

அதன்படி, 2026 தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா, இணை பொறுப்பாளராக முரளிதர் மொஹோல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பைஜெயந்த் பாண்டா எம்பியாகவும், பாஜவின் தேசிய துணை தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இணை பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள முரளிதர் மொஹோல் ஒன்றிய விமான போக்குவரத்து துறையின் இணை அமைச்சர். இவர்களின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தான் வரும் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசுவார்கள். அதே நேரத்தில் பாஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்து டெல்லி தலைமைக்கு அனுப்புவார்கள். அதன் பின்னரே யார் வேட்பாளர் என்பதை மேலிடம் அறிவிக்கும். தமிழக பாஜ பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 2 பேரும் விரைவில் தமிழகம் வந்து பாஜ நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். வரும் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசுவார்கள்.

Advertisement