தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆட்சியில் நாங்க பங்கு கேட்க மாட்டோம்; கூட்டணிக்கு யாரும் வராததால் விரக்தியில் பேசுகிறார் எடப்பாடி: சண்முகம் அட்டாக்

ராமநாதபுரம்: கூட்டணிக்கு அழைத்தும் யாரும் வராத விரக்தியில் எடப்பாடி பழனிசாமி மாறி, மாறி பேசுகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த 21ம் தேதி முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியோ இந்த தருணத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மதுரை ஆதீனம் சில மாதங்களுக்கு முன்பாக அவரை கொல்வதற்காக ஒருவர் காரை ஓட்டி வந்ததாக உள்நோக்கத்துடன் ஒரு பேட்டியை கொடுத்திருந்தார். அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் மதுரை ஆதீனம் போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் நீதிமன்ற உத்தரவை மீறி உள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து யாரும் வரவில்லை என்பதால் விரக்தியில் ஒவ்வொரு நாளும் மாற்றி, மாற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார். பாஜவுடன் அதிமுக அணி சேர்ந்திருக்கும் வரையிலும், அவர்களுடன் யாரும் கூட்டணி வைக்க வருவதற்கு தயாராக இல்லை. பாஜ உட்கட்சி பூசல் காரணமாகத்தான் துணை ஜனாதிபதி பதவி விலகியிருப்பதாக தெரிகிறது. மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தால் தவிர, வேறு எந்த கட்சி தலைமையிலான ஆட்சியிலும் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

Related News