ஆட்சியில் நாங்க பங்கு கேட்க மாட்டோம்; கூட்டணிக்கு யாரும் வராததால் விரக்தியில் பேசுகிறார் எடப்பாடி: சண்முகம் அட்டாக்
Advertisement
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து யாரும் வரவில்லை என்பதால் விரக்தியில் ஒவ்வொரு நாளும் மாற்றி, மாற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார். பாஜவுடன் அதிமுக அணி சேர்ந்திருக்கும் வரையிலும், அவர்களுடன் யாரும் கூட்டணி வைக்க வருவதற்கு தயாராக இல்லை. பாஜ உட்கட்சி பூசல் காரணமாகத்தான் துணை ஜனாதிபதி பதவி விலகியிருப்பதாக தெரிகிறது. மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தால் தவிர, வேறு எந்த கட்சி தலைமையிலான ஆட்சியிலும் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Advertisement