தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசியலையும், குடும்பத்தையும் விட்டு விலகுகிறேன்: லாலு மகள் திடீர் அறிவிப்பு

பீகார் தேர்தலில் லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2020 தேர்தலில் 75 தொகுதிகளில் வென்ற லாலு கட்சி இவ்வளவு மோசமாக தோற்றது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் லாலுபிரசாத் மகள் ரோகிணி ஆச்சார்யா நேற்று அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். மருத்துவம் படித்த அவர், சிங்கப்பூரில் வசித்து வந்தார்.

Advertisement

சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தைக்கு சிறுநீரகத்தை தானம் செய்தார். கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் சரண் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரது மூத்த சகோதரர் தேஜ்பிரதாப் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்து வந்தார். இருப்பினும் தேர்தலில் ​​அவர் தேஜஸ்விக்காக பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் தனது எக்ஸ் பதிவில், ‘நான் அரசியலை விட்டு வெளியேறுகிறேன், என் குடும்பத்தை விட்டு விலகுகிறேன.

சஞ்சய் யாதவும், ரமீஸும் என்னிடம் கேட்டது இதுதான். நான் எல்லாப் பழியையும் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.சஞ்சய் யாதவ் ஆர்ஜேடியின் மாநிலங்களவை எம்.பி. . இவர் லாலு பிரசாத்தின் மகனும், அரசியல் வாரிசுமான தேஜஸ்வி யாதவின் மிகவும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவர். ரமீஸ் அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த தேஜஸ்வியின் பழைய நண்பர் ஆவார். அவர்கள் ரோகிணி ஆச்சார்யாவிடம் என்ன சொன்னார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது லாலு குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement