தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எடப்பாடி பேசக்கூடாது: அமைச்சர் பி.மூர்த்தி பதிலடி

மதுரை: அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என நினைக்கக்கூடாது என அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார். மதுரை, சோலை அழகுபுரம், பழங்காநத்தம் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிகளை நேற்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தின் போது பதிவுத்துறையில் ஒரு பத்திரம் பதிவதற்கு 10% பணம் பெறப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். பொதுமக்கள் மட்டுமின்றி, அவர்களது கட்சி சார்ந்தவர்களும் பத்திரங்களை பதியத்தான் செய்கிறார்கள். எந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்து சதவீதம் லஞ்சம் பெறப்படுகிறது என்பதை அவர் கூற வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறையில் எந்தெந்த இடத்தில் எவ்வளவு ஊழல்கள் நடைபெற்றது என்பதை என்னால் கூற முடியும். ஆனால் சிபிஐ வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், அது குறித்து விரிவாக கூற விரும்பவில்லை.

Advertisement

அவர்களின் ஆட்சியில் எந்த வருடம், எந்தெந்த இடங்களில் பத்திரப் பதிவில் முறைகேடுகள் நடைபெற்றது என்பது குறித்த விபரங்கள் என்னிடம் இருக்கிறது. திமுக ஆட்சியில் எந்த நிலமும் முறைகேடாக பதிவு செய்யப்படவில்லை. எந்த ஒரு சார் பதிவாளர் தவறு செய்திருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டினாலும், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக, எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது. தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் கடந்த 4ம் தேதி ஒரே நாளில் ரூ.274 கோடி அளவிற்கு பத்திரப்பதிவு நடந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பதிவுத்துறையில் ஆண்டு வருமானம் ரூ.8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் கோடி மட்டுமே. திமுக அரசு வந்த பிறகு, பதிவுத்துறையில் கடந்த ஆண்டு ரூ.24 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இந்த ஆண்டு 26 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement