தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எனது அரசியல் வாழ்க்கையில் பாஜகவை போன்ற ஊழல் கட்சியை பார்த்ததில்லை: மோடி மீது ஆந்திரா அமைச்சர் காட்டம்

Advertisement

விசாகப்பட்டினம்: எனது அரசியல் வாழ்க்கையில் பாஜகவை போன்ற ஊழல் கட்சியை பார்த்ததில்லை என்று ஆந்திரா அமைச்சர் காட்டமாக தெரிவித்தார். ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டசபைக்கும் வரும் 13ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் ஒய்எஸ்ஆர் கட்சிக்கும், தெலுங்கு தேசம் தலைமையிலான பாஜக, நடிகர் பவன் குமாரின் ஜனசேனா கட்சியின் கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஆந்திர கல்வி அமைச்சரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூத்த தலைவருமான சத்தியநாராயணா அளித்த பேட்டியில், ‘பாஜக செய்யும் ஊழலை போன்று வேறு எந்த கட்சியும் செய்யவில்லை. எனது அரசியல் வாழ்க்கையில், பாஜகவை போன்ற ஊழல் கட்சியை நான் பார்த்ததில்லை.

மோடி தனது பிரதமர் பதவிக்கான அந்தஸ்தை குறைத்து வருகிறார். பிரதமர் மோடி ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, அவர் யாரோ எழுதி கொடுத்த ஸ்கிரிப்டை அப்படியே படித்துக் காட்டுகிறார். ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மக்களுக்கான ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை செய்துள்ளது. பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா ஆகிய கட்சிகள் கொள்ளை கூட்டணி வைத்துள்ளன. இந்த கூட்டணி ஊழலில் பங்குதாரர்களாக உள்ளன. மாநிலத்தில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்று பிரதமர் மோடிக்கு தெரியவில்லை. ஆந்திராவில் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா கூட்டணி ஆட்சிக்கு வராது’ என்றார்.

Advertisement

Related News