தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரபல பெண் அரசியல்வாதியான சமூக வலைதள பிரபலம் சடலமாக மீட்பு: ரசிகர்கள், மக்கள் கண்ணீர்

சாவோ லூயிஸ்: பிரேசிலில் இளம் பெண் அரசியல்வாதியும், சமூக வலைதள பிரபலமுமான ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டின் சாவோ லூயிஸ் நகருக்கு அருகே உள்ள லாகோ வெர்டே பகுதியைச் சேர்ந்த சமூக வலைதள பிரபலமான பெர்னாண்டா ஒலிவேரா டா சில்வா (30), உடற்பயிற்சி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறைகளைப் பகிர்ந்து மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். அதேசமயம், கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று லாகோ வெர்டே நகரின் கவுன்சிலராகப் பதவியேற்றார்.

Advertisement

மேலும், 2021 முதல் 2024 வரை இரண்டு முறை மாநகர சபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம ்தனது வீட்டில் பெர்னாண்டா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். பெர்னாண்டாவின் திடீர் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மறைவிற்கு மரியாதை செலுத்தும் வகையில், லாகோ வெர்டே நகரில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மாநகர சபை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து மாநகர சபை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘கவுன்சிலர் பெர்னாண்டா மரோக்காவின் மரணத்திற்கு லாகோ வெர்டே நகரம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது. பெர்னாண்டாவின் மரணச் செய்தி வெளியானதிலிருந்து, அதிர்ச்சியடைந்த ரசிகர்களும் நண்பர்களும் சமூக ஊடகங்களில் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement