தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை என்பது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம்: ஐகோர்ட் மதுரை கிளை காட்டம்

மதுரை: காவல்நிலையங்களில் இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் என ஐகோர்ட் மதுரை கிளை கூறியுள்ளது. மதுரை, தல்லாகுளத்தை சேர்ந்த சோமசுந்தரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ஆறுமுகம் என்பவரிடம் ரூ.3 லட்சம் கடனாக வாங்கியிருந்தேன். அதற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.6 லட்சம் வரை கொடுத்து விட்டேன். ஆனால், எனது வீட்டு அசல் பத்திரங்களை வைத்துக் கொண்டு தர மறுப்பதுடன், அதிக வட்டி கேட்டு மிரட்டுகிறார்.

Advertisement

இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், எனது அசல் பத்திரங்களை திருப்பி தருமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, ‘‘இதுபோன்ற புகார்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்துவதாக தெரிகிறது. இது கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு சமமாகும். வழக்கின் ஆரம்ப விசாரணையின் போது ஒரு நபருக்கு போலீசார் சம்மன் அனுப்ப இயலாது. ஆரம்ப விசாரணையின் நோக்கம் புகாரை ஆராய்வது மட்டுமே.

இந்த விசாரணையின் போது குற்றமாக கருதப்படக்கூடிய சாத்தியம் உள்ளது என்றால் காவல்துறை உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடரலாம். 173(3) பிஎன்என்எஸ் பிரிவின் கீழ் ஆரம்பகட்ட விசாரணையை, டிஎஸ்பியின் ஒப்புதலை பெற்று 14 நாட்களுக்குள் முடித்து, அதன் முடிவை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். மனுதாரர் மனுவின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் நடந்திருப்பது தெரிய வந்தால் உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்து மேல் விசாரணை நடத்த வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

Advertisement