தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவல்கரங்கள் சேவை மையம் மூலம் 2021 முதல் மாயமான 1,419 பேர் மீட்பு: நடப்பாண்டில் 725 பேர் மீட்பு; சென்னை காவல்துறை தகவல்

சென்னை: சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கை: சென்னை பெருநகர காவல்துறையில் 2021 ஏப்ரல் 21ம் தேதி ‘‘காவல் கரங்கள்‘‘ உதவி மையம், 9444717100 என்ற உதவி எண்ணுடன் ஆரம்பிக்கப்பட்டு, சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு \\”மனிதம் போற்றுவோம் மனித நேயம் காப்போம்\\” என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சேவையாற்றி வருகின்றனர்.

Advertisement

சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் ஆணையர் (தலைமையிடம்) கண்காணிப்பில், நவீன காவல் கட்டுப்பாட்டறை, காவல் கரங்கள் உதவி மையம் மூலம் பெறப்படும் அழைப்புகள் வீடற்ற, ஆதரவற்றவர்களுக்கு உதவ வேண்டி காவல்துறையுடன் தன்னார்வலர்கள் உதவியுடன் உடனடி உதவியும், காவல் ரோந்து வாகனங்கள் மூலம் அழைப்பின்பேரில், அவ்விடத்திற்கு உடனடியாக சென்று ஆதரவற்றவர்களை மீட்டு, உரிய மருத்துவ மற்றும் தங்கும் வசதி இருப்பிடங்கள் வசதிகளுள்ள அரசு மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பு இல்லங்களில் தன்னார்வலர்களின் மூலம் அனுமதிக்கப்படுகின்றனர்.

பின்னர் தொடர்ச்சியாக உதவி செய்து ஆதரவற்றவர்களின் உறவினர்ளை கண்டறிந்து மீண்டும் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்படுகிறது. ஆதரவற்றவர்களை மேற்குறிப்பிட்ட இல்லங்களில் சேர்த்து நல்ல முறையில் பேணி பராமரித்தும் உதவி செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த 13ம் தேதி காவல் கரங்கள் குழுவினருக்கு கிடைத்த தகவலின்பேரில், தேனாம்பேட்டை சிக்னல் அருகே இருந்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (70) என்பவர் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டார். இதேபோல நேற்று காலை, புரசைவாக்கம், நோபல் மருத்துவமனை அருகில் ஆதரவற்ற நிலையில் இருந்த ஐ.சி.எப் பகுதியை சேர்ந்த லோகநாயகி (80) என்பவரை அவரது மகனிடம் சேர்த்து வைக்கப்பட்டார்.

நடப்பு 2025ம் ஆண்டு இதுவரை ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த 725 பேர் மீட்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு விவரங்கள் சேகரித்து, அதில் 128 பேர் அவர்களது குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை காவல் கரங்கள் சேவை மையம் மூலம் 2021ம் ஆண்டு காணாமல் போன முதல் 1,419 பேர் காணாமல் தவித்த அவர்தம் குடும்பத்துடன் மீள சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். ஆதரவற்ற உதவிகள் கோரும் நிலையில் கண்டறியப்படும் நபர்களுக்கு உதவிட காவல் கரங்கள் உதவி மையம் அழைப்பு எண் 9444717100 என்ற எண்ணை அழைக்கலாம். இவ்வாறு சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News