தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டி- பாலக்காடு புறப்பட்ட அரசு பஸ் டிரைவரை தாக்கிய போலீஸ்காரர்

*வாகனங்கள் அணி வகுத்து போராட்டம்
Advertisement

ஊட்டி : அரசு பஸ் டிரைவரை மப்டியில் இருந்து போலீசார் தாக்கியதாக கூறப்படும் நிலையில், நேற்று ஊட்டி - குன்னூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊட்டியில் இருந்து நேற்று காலை பாலக்காட்டிற்கு அரசு பஸ் புறப்பட்டது. நொண்டிமேட்டில் பஸ் வேகமாக வந்தது. அப்போது எதிரே வந்த பைக் மீது மோதுவதுபோல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பைக் ஓட்டிய நபர் பஸ்சை மறித்தார். அந்த நபர் மப்டியில் வந்த போலீஸ்காரர் அருண் என்று தெரியவருகிறது. மோதுவதுபோல் பஸ் வந்தது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த போலீஸ்காரர், பஸ் டிரைவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். இதற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் பரவியதை அடுத்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அடுத்தடுத்த அரசு பஸ் உள்ளிடட் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டு டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனையடுத்து பொதுமக்கள் அங்கு வந்து பஸ் டிரைவர் மற்றும் போலீஸ்காரர் அருண் ஆகியோரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதன்பினர் ஊட்டி- குன்னூர் சாலை சீரானது.

Advertisement

Related News