தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 16 பேர் மீது போலீஸ் வழக்கு

Advertisement

வேதாரண்யம்: நாகை மாவட்ட மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 16 பேர் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டம், வெள்ளப்பள்ளம், செருதூர், அக்கரப்பேட்டை, ஆலுகாட்டு துறையைசேர்ந்த 23 மீனவர்கள் 4 பைபர் படகில் நேற்று முன்தினம் கோடியக்கரை தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டு இருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் வழிமறித்து கத்தி, இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கி உள்ளனர்.

பின்பு மீனவர்களின் படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, செல்போன், வாக்கிடாக்கி, வலை, இஞ்சின் உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றனர். தாக்குதலில் காயம் அடைந்த 19 மீனவர்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக மீனவர்களை ஆயுதம் கொண்டு மிரட்டி தாக்கி விட்டு பொருட்களை கொள்ளையடித்து சென்ற இலங்கையை சேர்ந்த அடையாளம் தெரியாத கடற்கொள்ளையர்கள் 16 பேர் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement