தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

போலீசை சுட்டுக்கொன்று தற்கொலை செய்த வாலிபர் கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட மனசோர்வால் துப்பாக்கி சூடு? விசாரணையில் தந்தை தகவலால் பரபரப்பு

அட்லான்டா: அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லான்டாவில் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமையகம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்துக்குள் நேற்று காலை துப்பாக்கியுடன் நுழைந்த பேட்ரிக் ஜோசப் வைட் என்ற நபர் அங்கிருந்த அறைகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி டேவிட் ரோஸ் துப்பாக்கி சூடு நடத்திய பேட்ரிக் ஜோசப் வைட்-ஐ தடுக்க முயன்றார். அவரையும் பேட்ரிக் ஜோசப் வைட் சுட்டு கொன்றார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பேட்ரிக் ஜோசப் வைட்-ஐ தேடினர். அப்போது ஒரு அறையில் பேட்ரிக் ஜோசப் வைட் சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பேட்ரிக் ஜோசப் வைட் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் பற்றி பேட்ரிக் ஜோசப் வைட்டின் தந்தை காவல்துறையினரிடம் கூறுகையில், “என் மகன் பேட்ரிக் ஜோசப் வைட் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு எப்போதும் மனசோர்வுடன் இருந்தான். தற்கொலை எண்ணங்கள் கூட அவனுக்கு வந்தது.

அண்மையில் அவன் வளர்த்து வந்த நாய் இறந்து போனதால் மனவருத்தம் அதிகமாகி விட்டது” என்றார்.

தடுப்பூசிகள் மீதான அதிருப்தி, அவநம்பிக்கை காரணமாக தேசிய சுகாதார அமைப்பின் தலைமையகம் மீது பேட்ரிக் ஜோசப் வைட் துப்பாக்கி சூடு நடத்தினாரா? அல்லது வேறேதும் காரணமாக? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related News