தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவல் நிலைய கண்காணிப்பு கேமரா தொடர்பான வழக்கு; இனியும் தாமதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது: ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி

Advertisement

புதுடெல்லி: காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பான உத்தரவை மதிக்காத ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் காவல் நிலையங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சித்திரவதைகளைத் தடுக்கும் வகையில், கடந்த 2020ம் ஆண்டே உச்சநீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்துக் காவல் நிலையங்கள் மற்றும் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளின் அலுவலகங்களில் ஆடியோ மற்றும் இரவு நேரக் காட்சிப் பதிவு வசதியுடன் கூடிய நவீன கண்காணிப்பு கேமராக்களைக் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், விசாரணையின் போது நடைபெறும் நிகழ்வுகளை உறுதிப்படுத்தும் விதமாக, இந்தக் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளைக் குறைந்தது ஓராண்டு முதல் 18 மாதங்கள் வரை பாதுகாப்பாகச் சேமித்து வைக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுப் பல ஆண்டுகள் கடந்தும், இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படாதது குறித்து நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் மட்டும் கடந்த எட்டு மாதங்களில் 11 லாக்-அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘காவல் நிலையச் சாவுகள் நமது நீதி அமைப்பிற்கே ஏற்பட்ட கறையாகும்; இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று வேதனை தெரிவித்தனர். மேலும், ஒன்றிய அரசு நீதிமன்ற உத்தரவுகளை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்வதாகக் குற்றம் சாட்டிய நீதிபதிகள், ‘பல காவல் நிலையங்களில் கேமராக்கள் இயங்குவதில்லை அல்லது போதிய சேமிப்பு வசதி இல்லை எனக் காரணம் கூறுவதை ஏற்க முடியாது; இனிமேலும் தாமதத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது.

கேமராக்களைப் பொருத்துவது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய ஒன்றிய, மாநில அரசுகளுக்குக் கடைசி வாய்ப்பாக மூன்று வாரங்கள் அவகாசம் வழங்கியுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 16ம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் உள்துறைச் செயலாளர்கள் மற்றும் மத்திய விசாரணை அமைப்புகளின் தலைவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். மேலும், கேமராக்கள் வேண்டுமென்றே அணைக்கப்படுவதைத் தடுக்கவும், அவற்றின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணிக்கவும் ஐஐடி போன்ற நிறுவனங்களின் உதவியுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் நீதிமன்றம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

Advertisement

Related News