தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவல் மற்றும் வருவாய்துறையில் கருப்பு ஆடுகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

திருச்சி:காவல்துறை மற்றும் வருவாய்த்துறையில் உள்ள கருப்பு ஆடுகள் கைது செய்யப்பட வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வராயன்மலையில் சாராய உற்பத்தி தொடர் கதையாக நடக்கிறது. இதில் காவல்துறையில் பல கருப்பு ஆடுகள், வருவாய் துறையிலும் பலர் உள்ளனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
Advertisement

கடந்த 15 ஆண்டுகளாக அங்கே பணி செய்தவர்களின் விவரங்களை கண்டறிந்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசை பொறுத்தவரை கள்ளச்சாராயம் தமிழகத்தில் இருக்க கூடாது என்பதில் திட்டவட்டமாக இருக்கிறது. கடந்த ஆட்சி காலத்திலும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அப்போது எடப்பாடி ராஜினாமா செய்திருந்தால் எத்தனை முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என எண்ணி பார்க்க வேண்டும். அதானி துறைமுகத்தில் இருந்து தான் தமிழகத்திற்கு போதை மற்றும் கஞ்சா பொருட்கள் வருகிறது. குஜராத்தில் இருந்து அம்பு ஏவப்படுகிறது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News