தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 150 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் அண்ணாபதக்கம் அறிவிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 150 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் அண்ணாபதக்கம் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சரின் அண்ணாபதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

அதன்படி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 150 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் அண்ணாபதக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டு அவர்களின் பட்டியல் நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தெற்கு மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி தாமஸ் ஜேசுதாசன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்பி யுவராஜ், ஆவடி காவல் ஆணையரகத்தில் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் பிரபு, தாம்பரம் ஆணையரகம் சேலையூர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் சந்துரு,

எஸ்பிசிஐடி இன்ஸ்பெக்டர் கோபிநாத், சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு சிறப்பு எஸ்ஐ ரமேஷ்குமார், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் அமுதா, சென்னை ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு தலைமை காவலர் சுரேஷ் உட்பட மொத்தம் 150 அதிகாரிகளுக்கு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் அறிவித்துள்ளார்.

Advertisement