தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவல்துறை தடை போடுகிறது என்று சொல்ல முடியாது விஜய்யை கண்டு திமுகவுக்கு பயம் கிடையாது: பிரேமலதா பேட்டி

புதுக்கோட்டை: விஜய்யை கண்டித்து திமுகவுக்கு பயம் கிடையாது என்று பிரேமலதா தெரிவித்தார். புதுக்கோட்டையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இதுவரை இல்லாத அளவிற்கு 2026 தேர்தல் மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். இந்த தேர்தலில் புதிதாக நடிகர் விஜய் கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்கிறார். ஏற்கனவே சீமான் தனியாக நிற்கிறார். இரண்டு பெரிய கட்சிகள் கூட்டணி பலத்தோடு நிற்கிறது. தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்களுடைய நிலைப்பாடுகள் இதுவரை கூறவில்லை. தேர்தலுக்கு இன்னும் 7 மாதம் உள்ளது. விரைவில் அதற்கான முழு வடிவம் கிடைக்கும். தேமுதிகவை கூட்டணிக்குள் சேர்க்க அனைத்து கட்சிகளும் தயாராகத் தான் இருக்கின்றன.

Advertisement

விஜய்யை கண்டு திமுகவிற்கு பயம் கிடையாது. காவல்துறை வந்து இவ்வளவு தடை போடுகிறார்கள் என்று நாம் சொல்ல முடியாது. ஏனென்றால், நாளைக்கு ஒரு சட்ட ஒழுங்கு பிரச்னை நடக்கிறது என்றால் அதற்கு யார் பதில் சொல்வார்கள்? எனவே, இப்படி பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. எனவே, ஒரே கண்ணோட்டத்தில் தடை செய்கிறார்கள் என்று பேசக்கூடாது. அரசியலில் இடையூறுகள் கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும்.தமிழகத்தில் மிகப்பெரிய 2 கட்சிகள், தேசிய கட்சிகள் உள்ளதால் தடைகளை கடந்து வருவதுதான் வெற்றி. இருந்தாலும் சாதாரண சவால் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News