தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பவுஜா சிங் மீது கார் ஏற்றிவிட்டு தப்பியோடிய கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளி கைது: பஞ்சாப் போலீஸ் அதிரடி

Advertisement

அமிர்தசரஸ்: மூத்த மாரத்தன் வீரர் பவுஜா சிங் மீது கார் ஏற்றிவிட்டு தப்பியோடிய கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளியை பஞ்சாப் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ‘டர்பன் டொர்னாடோ’ என்று அன்புடன் அழைக்கப்படும் மூத்த தடகள வீரரான பவுஜா சிங் (114), பஞ்சாபில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு அருகே ஜலந்தர்-பதான்கோட் நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அவர் மீது அடையாளம் தெரியாத கார் மோதி விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் விபத்தை ஏற்படுத்திய டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை அடையாளம் கண்டனர்.

விசாரணையில், அந்தக் கார் கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான அம்ரித்பால் சிங் தில்லான் (30) என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. கடந்த வாரம் இந்தியா வந்திருந்த அவரை, போலீசார் அவரது கிராமத்தில் வைத்து கைது செய்தனர். விசாரணையில், தில்லான் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், காரில் மோதியது புகழ்பெற்ற பவுஜா சிங்தான் என்பது, டிவியில் வெளியான செய்தி மூலம் தான் தனக்குத் தெரியவந்தது என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது அவரை கைது செய்துள்ள போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement