தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆழியார் அணைப்பகுதியில் தடையை மீறி பயணிகள் குளிப்பதை தடுக்க கண்காணிப்பு பணியில் போலீசார் தீவிரம்

Advertisement

பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

ஆழியார் அணையை சுற்றி பார்க்க வரும் பயணிகள் பலர், தடை விதிக்கப்பட்ட பகுதி என தெரியாமல் ஆற்றோரம் உள்ள பாலத்தின் கீழ் பகுதி மற்றும் அணையை ஒட்டியுள்ள இடங்களில் குளிக்கின்றனர். ஆழமான பகுதி மற்றும் மணல் நிறைந்த சேற்று பகுதியாக இருப்பதால் உயிர்பலி ஏற்படுகிறது.

ஆழியாற்றில் அடிக்கடி உயிர்ப்பலி ஏற்படுவதால், அதனை தடுக்க போலீசார் மற்றும் பொதுப்பணித்துறையினர் அப்பகுதியில் சுமார் 3 மாதத்திற்கு முன்பு 6இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்தனர்.

ஆனால், அந்த எச்சரிக்கை போர்டுகள், பலத்த காற்றுக்கும், மழைக்கும் சேதமாகி காணாமல் போயுள்ளது.இதையடுத்து, தடையை மீறி சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க பொதுப்பணித்துறையினர் கண்காணிப்புபணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தற்போது ஆழியார் அணையின் நீர் மட்டம் 118 அடியாக உயர்ந்து அணையை சுற்றியுள்ள பகுதியில் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. இதனால், விடுமுறை நாட்கள் மட்டுமின்றி, பிற நாட்களிலும் தடையை மீறி சுற்றுலா பயணிகள் யாரேனும் தடுப்பணை பகுதியில் இறங்கி குளிக்கின்றனரா என கண்காணிக்கின்றனர்.

அதிலும், ஆழியார் அறிவுத்திருக்கோயில் எதிரே உள்ள பகுதியில், தடையை மீறி செல்பவர்களை எச்சரித்து அனுப்புகின்றனர். மேலும், ஆழியார் அணை பகுதி, தடுப்பணை பகுதி, கவியருவிக்கு செல்லும் வழி என பல்வேறு இடங்களில் ஆங்காங்கே போலீசார் நின்று தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

Advertisement