தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கல்பட்டு அருகே 2,950 கிலோ கடத்தல் கஞ்சா தீவைத்து அழிப்பு: போலீஸ் நடவடிக்கை

செங்கல்பட்டு : சட்டவிரோத போதைப்பொருளை ஒழிப்பதற்கான மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக கூடுதல் காவல்துறை இயக்குனர், EBCID அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மாநிலம் முழுவதும் போதைபொருள் நுண்ணறிவு பிரிவு போலிசாரால் 89 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2950 கிலோ கஞ்சாவை போதைபொருள் ஒழிப்பு குழுமத்தின் மேற்பார்வையில் செங்கல்பட்டு தென்மேல்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள GJ Multiclave-ல் தீயிலிட்டு அழிக்கப்பட்டது.
Advertisement

இணை ஆணையர் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை), காவல் கண்காணிப்பாளர் (போதைபொருள் நுண்ணறிவு பிரிவு) மற்றும் துணை இயக்குனர் (தடய அறிவியல் துறை) ஆகியோர்கள் அடங்கிய குழுவினரால் மேற்படி கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது.

மேலும் போதைபொருள் நுண்ணறிவுபிரிவு போலிசாரால் கடந்த மார்ச் 2024 ல் 3685 கிலோ, ஆகஸ்டு 2024ல் 6165 கிலோ மற்றும் 30.09.2024 ஆம் தேதி 2950 கிலோ முறையே 2024 ஆம் ஆண்டில் இதுவரை 12800 கி.கி கஞ்சா தீயிலிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

போதைபொருள் கடத்தல்/ உபயோகப்படுத்துதலை முற்றிலும் தடுக்கவும், அதன் ஆபத்துகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இத்தகைய நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் போதைபொருட்களை முற்றிலுமாக ஒழிக்க NIB-CID போலிசார், போதைபொருள் குற்றவாளிகளின் வலையமைப்பை (Network) தொடர்ந்து கண்காணிக்க சட்டம் ஒழுங்கு காவல்துறையினருடன் இணைந்து பிறமாநில போலிசார் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பினருடன் நெருக்கமாக பணியாற்றிவருகின்றனர்.

மேலும் பொதுமக்கள், போதைப்பொருள் மற்றும் மனமயக்க பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான எந்தவொரு தகவலையும் 10581 என்ற கட்டணமில்லா உதவி எண்ணிலும், 9498410581 என்ற வாட்ஸ்அப் மூலமாகவும் அல்லது spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement