தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவலர் தினத்தை முன்னிட்டு போலீஸ், பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி

மஞ்சூர் : காவலர் தினத்தை முன்னிட்டு மஞ்சூரில் போலீஸ் பொதுமக்கள் இடையே நல்லுறவு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு இரவு பகலாக பணியாற்றும் தமிழ்நாடு காவல் துறையினரை கௌரவிக்கும் வகையில் செப்.6ம் தேதி காவலர் தினம் கொண்டாடப்படும் என சட்டமன்ற கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, நீலகிரி மாவட்ட எஸ்.பி நிஷா அறிவுறுத்தலின்படி மஞ்சூர் காவல் நிலையத்தில் காவலர் தினம் கொண்டாடப்பட்டது.

Advertisement

இதைத்தொடர்ந்து, போலீஸ் பொதுமக்கள் இடையே நல்லுறவை பேணிகாக்கும் வகையில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. மஞ்சூர் மின் வாரிய மேல் முகாம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியை இன்ஸ்பெக்டர் விஜயா துவக்கி வைத்தார்.

இதில், எஸ்ஐக்கள் பாலசிங்கம் மற்றும் செல்வன் ஆகியோர் தலைமையில் போலீசார் பொதுமக்களுடன் இணைந்து இரு அணிகளாக பிரிந்து கிரிக்கெட் விளையாடி அசத்தினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என மஞ்சூர் போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

Related News