தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

20 கிமீ தூரம் விரட்டிச் சென்று பிடித்த போலீசார் ஒன்றரை டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்

காரைக்குடி : காரைக்குடி அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசியை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.புதுக்கோட்டையில் இருந்து சிவகங்கைக்கு ரேஷன் அரிசி கடத்தி வருவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.

இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மினி சரக்கு வாகனம் போலீசாரை பார்த்ததும் நிற்காமல் வேகமாக கடந்து சென்றது.

உடனடியாக போலீசார் மினி சரக்கு வாகனத்தை விரட்டி வந்தனர்.

போலீசார் 20 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்ற நிலையில், காரைக்குடி அருகே கரிவியப்பட்டி என்ற இடத்தில் மினி சரக்கு வாகனத்தை பள்ளத்தில் கவிழ்த்து விட்டு டிரைவர் தப்பிவிட்டார். போலீசார் வாகனத்தில் சோதனை நடத்தினர்.

அதில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை கைப்பற்றிய போலீசார், அதனை கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.