தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூரியனை பார்த்தே ஒரு மாதம் ஆகிவிட்டது எனக்கு சிறை வாழ்க்கை வேண்டாம் விஷம் கொடுத்து விடுங்கள்: நீதிபதியிடம் கதறிய நடிகர் தர்ஷன்

பெங்களூரு: சூரியனை கூட பார்க்க முடியாத சிறை வாழ்க்கையை தன்னால் சமாளிக்க முடியாததால் விஷம் கொடுக்குமாறு நீதிபதியிடம் தர்ஷன் கேட்க, கூடுதல் தலையணை, போர்வை மற்றும் சிறை வளாகத்தில் நடப்பதற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் தர்ஷன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால், சிறையில் தான் இருக்கும் அறையில் கூடுதலாக தலையணை மற்றும் போர்வை வழங்க அனுமதிக்க வேண்டும். மேலும் வீட்டில் இருந்து கொண்டுவரும் உணவு சாப்பிட அனுமதி வழங்ககோரி நடிகர் தர்ஷன் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதி விசாரணை நடத்தினார்.

Advertisement

அப்போது, காணொலி காட்சி மூலம் தர்ஷன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம், தர்ஷன் கூறியதாவது: சூரியனைப் பார்த்தே ஒரு மாதம் ஆகிவிட்டது. சிறை அறையிலிருந்து வெளியே வரக்கூட அனுமதிக்கப்படவில்லை. அறையை விட்டு வெளியே செல்லாததால் கைகள் எல்லாம் பூஞ்சைகள் நிறைந்திருக்கின்றன. ஆடைகளில் துர்நாற்றம் வீசுகிறது. என்னால் இதற்கு மேலும் இப்படியே இருக்க முடியாது. இந்த வாழ்க்கையை என்னால் இனிமேலும் அனுபவிக்க முடியாது. எனக்கு விஷம் கொடுத்துவிடுங்கள் என்று நீதிபதியிடம் கதறினார். அதற்கு, அப்படியெல்லாம் செய்யமுடியாது என்று கூறிய நீதிபதி, மனிதநேய அடிப்படையில் மனுதாரரின் உடல்நலத்தை கருத்தில்கொண்டு அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் கூடுதலாக தலையணை, போர்வை பயன்படுத்த அனுமதி வழங்குமாறும், சிறை விதிமுறைகள் அடிப்படையில் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறை வளாகத்தில் நடப்பதற்கும் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

Advertisement