தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இல்லாத குறளில் ஆளுநர் மாளிகையில் விருது.. எங்கள் திருவள்ளுவரை விட்டுவிடுங்கள் என கவிஞர் வைரமுத்து பதிவு

Advertisement

சென்னை : மருத்துவ தினத்தையொட்டி, கிண்டிஆளுநர் மாளிகையில் மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா கடந்த 13ம்தேதி நடந்தது. தமிழகத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் 50 மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டு ஆளுநர்ரவி நினைவு பரிசு வழங்கினார். இந்த கேடயத்தில் திருக்குறள் ஒன்று அச்சிடப்பட்டிருந்தது. அந்த திருக்குறளின் வரிசை எண் 944 என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் திருக்குறளில் அப்படி ஒரு குறளே கிடையாது என்பது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே ஆளுநர் அளித்த விருதில் போலி திருக்குறள் இடம்பெற்றதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பக்கத்தில்,

"ஜூலை 13இல்

‘வள்ளுவர் மறை

வைரமுத்து உரை’ நூலை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வெளியிட்ட அதே நாளில்

ஆளுநர் மாளிகையில்

ஒரு விழா

நடந்ததாய்க் கேள்விப்பட்டேன்

மருத்துவர்களுக்கு

வழங்கப்பட்ட

நினைவுப் பரிசில்

944ஆம் திருக்குறள் என்று

அச்சடிக்கப்பட்ட வாசகத்தில்

இல்லாத குறளை

யாரோ எழுதியிருக்கிறார்கள்

அப்படி ஒரு குறளே இல்லை;

எண்ணும் தவறு

யாரோ ஒரு

கற்பனைத் திருவள்ளுவர்

விற்பனைக் குறளை

எழுதியிருக்கிறார்

இது எங்ஙனம் நிகழ்ந்தது?

ராஜ்பவனில்

ஒரு திருவள்ளுவர்

தங்கியுள்ளார் போலும்

அந்தப்

போலித் திருவள்ளுவருக்கு

வேண்டுமானால்

காவியடித்துக்கொள்ளுங்கள்

எங்கள்

திருவள்ளுவரை விட்டுவிடுங்கள்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement