தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போக்சோ வழக்கு குறித்து போலீசாருக்கு பயிற்சி வகுப்பு

சென்னை: போக்சோ வழக்குகள் தொடர்பாக போலீசாருக்கு 2ம் கட்ட பயிற்சி வகுப்புகள் நேற்று நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு போக்சோ வழக்கு சம்பந்தமான பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே கடந்த 15ம் தேதி நடந்தது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக நேற்று காலை 10 மணி முதல் 5 மணி வரை எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல இணை ஆணையர் அலுவலகம், இரண்டாம் தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடத்தப்பட்டது.

Advertisement

இந்த பயிற்சி வகுப்பை சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல இணை ஆணையர் பண்டிட் கங்காதர் கலந்து கொண்டார். இப்பயிற்சி வகுப்பு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையர் வனிதா மேற்பார்வையில் நடந்தது. பயிற்சி வகுப்புகளில் அனைத்து மகளிர் காவல் நிலைய மற்றும் மத்திய குற்றப்பிரிவில் பணிபுரியும் 18 காவல் ஆய்வாளர்களும், 8 உதவி ஆய்வாளர்களும், 19 காவலர்கள் என மொத்தம் 45 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். மேலும் பயிற்சி வகுப்புகள் வரும் 29ம் ேததி மற்றும் டிசம்பர் 6ம் தேதி ஆகிய தேதிகளில் நடக்கிறது.

Advertisement

Related News