தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போச்சம்பள்ளி அருகே பாதை வசதி கேட்டு கிராம மக்கள் தர்ணா

*தாசில்தார் சமரசம்
Advertisement

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி அருகே பள்ளிக்கு பாதை வசதி கோரி கிராம மக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே செல்லகுடப்பட்டி ஊராட்சி காட்டுக்கொல்லை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள் தனியார் நிலத்தின் வழியாக பள்ளிக்கு வந்து சென்றனர்.

இதற்காக 3 அடி அகலத்திற்கு அதிகாரிகள் பாதை வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். மாணவர்கள் எளிதாக சென்று வரும் வகையில், சாலையை விரிவாக்கம் செய்து கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி, நேற்று பள்ளி முன் 100க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டனர். பின்னர், திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலின் பேரில், போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா மற்றும் பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது, மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதி கூறியதன் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement