மேட்டூர் அனல் மின்நிலையத்தில் அத்துமீறி நுழைந்த பாமக எம்எல்ஏ: அதிரடி கைது
இதனால் காற்றில் சாம்பல் பரவாமல் தடுத்த பிறகு, மேட்டூர் அனல் மின்நிலையத்தை இயக்க வேண்டும் என்று கோரி, மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் தனது ஆதரவாளர்களுடன், நேற்று அனல் மின் நிலைய நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் மேட்டூர் அனல் மின் நிலைய பொறியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திடீரென எம்எல்ஏ சதாசிவம், மேட்டூர் அனல் மின் நிலையத்தின் உள்ளே தனது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அனல் மின் நிலைய அதிகாரிகளும், பாதுகாவலர்களும் ஸ்தம்பித்து நின்றனர். தடை செய்யப்பட்ட அனல் மின் நிலைய பகுதிக்கு அத்துமீறி சென்றதால், மேட்டூர் போலீஸ் டிஎஸ்பி ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார், எம்எல்ஏ சதாசிவத்தையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்து ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றனர். அப்போது, பாமகவினர் சிலர் சாலையில் படுத்து ஜீப்பை மறித்தனர். பின்னர், அவர்கள் வழிவிட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் திருமண மண்பத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேட்டூர் எம்எல்ஏ கைது செய்யப்பட்டதால், மேட்டூர் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.