தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாமகவில் அதிகாரம் எல்லாம் ராமதாசுக்குதான்: அருள் எம்.எல்.ஏ. திட்டவட்டம்

Advertisement

சென்னை: பா.ம.க.வில் அதிகாரம் எல்லாம் ராமதாசுக்குதான் என அருள் எம்.எல்.ஏ. திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோருக்கு இடையே, கடும் அதிகார மோதல் நடந்து வருகிறது. இரு தரப்பினரும் தாங்கள்தான் உண்மையான பாமக என்று கூறிக் கொள்வதோடு, ஒருவரின் ஆதரவாளரை, மற்றொருவர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குவது, சேர்ப்பது என கட்சிக்குள் பெரும் குளறுபடி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தைலாபுரம் இல்லத்தில் பாமக எம்எல்ஏ அருள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது; பா.ம.க.வில் அதிகாரம் எல்லாம் ராமதாசுக்குதான். பா.ம.க.வில் பொறுப்பாளர்களை நியமிக்கவோ மாற்றவோ முழு அதிகாரம் படைத்தவர் ராமதாஸ் மட்டுமே. ஜி.கே.மணி உள்ளிட்டோர் தலைவராக இருந்தபோதும் அதிகாரம் ராமதாஸிடம் இருந்தது. தந்தைக்கு கட்டுப்பட மறுக்கும் அன்புமணியின் செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளாகி உள்ளது. அப்பாவை மகன் மதிப்பது தான் தமிழ்நாட்டின் பாரம்பரியம். பதவிக்காக பெற்ற அப்பாவையே அன்புமணி விட்டு போகிறார். அன்புமணி தவறான முன்னுதாரணம் ஆகிவிடுவாரோ என்று பயமாக உள்ளது என்று கூறினார்.

Advertisement

Related News