தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாமக யாருடன் கூட்டணி? சில மாதங்களில் முடிவு: ராமதாஸ் பேச்சு

நெமிலி: மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி என இன்னும் சில மாதங்களில் முடிவெடுக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார். ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நெமிலியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:

Advertisement

தமிழகத்தில் ஒவ்வொரு சாதியிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை அரசு வழங்கவேண்டும். எனவே விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். வரும் டிசம்பர் 12ம் தேதி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல், வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குதல் என்ற இருகோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும்.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி என இன்னும் சில மாதங்களில் முடிவெடுக்கப்படும். அந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும். அதுவரையில் கட்சியை வளர்க்கும் பணியில் தொண்டர்கள் ஈடுபட வேண்டும். பெண்களிடம் ஆக்கல், காத்தல் மற்றும் தீமைகளை அழித்தல் ஆகிய மூன்று சக்திகள் உள்ளது. எனவே, ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்று உறுதியாக இருக்க வேண்டும். பெண்கள் உறுதியாக இருந்தால் நல்லாட்சி அமையும் என்றார்.

Advertisement

Related News