தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிகிச்சை முடிந்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வீடு திரும்புவார்: மநீம தலைவர் கமல்ஹாசன் தகவல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புவார் என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதய பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார். முதுநிலை இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு தலைமையிலான குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இந்தநிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் அவரை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து, நலம் விசாரித்தார். அதனை தொடர்ந்து, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைகோவின் உறவினரை சந்தித்து நலம் விசாரித்தார்.

பிறகு மருத்துவமனை வளாகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து உடல் நலம் விசாரிக்க வந்தேன், அதற்கு முன்பாகவே நல்ல செய்தி வந்தது. இன்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார். வைகோவுக்கு காய்ச்சல் தணிந்துவிட்டது, அவரும் நலமுடன் இருக்கிறார். கரூர் சம்பவம் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதனை பற்றி பேசிகொண்டே இருக்க வேண்டாம். அது ஒரு சோகம் சம்பவம் தான், பேசி கொண்டு இருந்தால் சோகம் போகிவிடாது. இனிமேல் இது போன்று நடைபெறாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News