திருப்பத்தூரில் விடுதியில் தங்கி படித்த பிளஸ் 1 மாணவன் பள்ளி கிணற்றில் சடலமாக மீட்பு: பெற்றோர், உறவினர்கள் மறியல்
அதில் கிணற்றுக்குள் முகிலன் சடலமாக மிதப்பது தெரியவந்தது. கிரில் கம்பிகள் போட்டு மூடப்பட்டுள்ள கிணற்றின் ஒரு புறத்தில் மட்டும் சிறிய அளவில் திறந்த பகுதி இருந்தது. தீயணைப்பு மீட்பு படையினர் வந்து கிணற்றில் இறங்கி சடலத்தை மீட்டனர். மகன் சாவில் சந்தேகம் உள்ளதால் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யவேண்டும் எனக்கூறி பெற்றோர் போராட்டம் நடத்தினர். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தவெக கட்சியினர் சிலர் மறியலில் ஈடுபட்டனர். வேலூர் எஸ்பி மயில்வாகனன், திருப்பத்தூர் எஸ்பி சியாமளாதேவி ஆகியோர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். இதனிடையே மாணவன் சாவு தொடர்பாக பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 4 பாதிரியார்கள் மற்றும் ஒரு ஆசிரியரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.