தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காங்கயம், வெள்ளகோவிலில் மானாவாரியில் உழவுப் பணி தீவிரம்

காங்கயம் : காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் பரவலாக பெய்த மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் மானாவாரி நிலங்களில் உழவுப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Advertisement

காங்கயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் கடந்த 15 நாட்களாகவே அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. புரட்டாசி மாதத்தில் சில பகுதிகளில் விதைப்புக்கு போதிய அளவு மழை பெய்த நிலையில் தற்போது பரவலாக பெய்த மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் மானாவாரி நிலங்களில் விதைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கொள்ளு, நரிப்பயறு, பாசிப்பயறு, சோளம், மொச்சை, தட்டை, உளுந்து உள்ளிட்ட மானாவாரி பயிர்களை விதைப்பு செய்யத் தொடங்கியுள்ளனர். பெரும்பாலும் மேய்ச்சல் நிலங்களில் நரிப்பயறு, கொள்ளு, சோளம் ஆகிய பயிர்களைத்தான் விதைப்பு செய்வர். காரணம் இந்தப் பகுதிகளில் ஆடு, மாடுகளுக்கு தீவனமாக இந்தப் பயிர்கள் பயன்படுகிறது.

விதைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் தானிய மண்டிகளில் மானாவாரி பயிர்கள் விதை விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது நரிப்பயறு கிலோ ரூ.170, கொள்ளு ரூ. 45, சோளம் ரூ. 50, பாசிப்பயறு ரூ. 140, தட்டைப்பயறு ரூ. 100, உளுந்து ரூ. 120 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுபற்றி விவசாயிகள் தரப்பில் கூறும்போது, நடப்பாண்டு மழை பரவலாக பெய்துள்ளதால் விதைப்பு செய்து வருகிறோம். அடுத்த சில நாட்களில் போதிய மழை பெய்யுமானால் விதைத்த தானியங்களை அறுவடை செய்துவிடலாம். இல்லையெனில் முதலுக்கே மோசமாகத்தான் முடியும் என்றனர்.

Advertisement

Related News