தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்ஐஆர் பணிகளால் அதிக வேலைப்பளு கேரளாவில் 35 ஆயிரம் பிஎல்ஓக்கள் போராட்டம்

 

Advertisement

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூரைச் சேர்ந்த அனீஷ் ஜார்ஜ் என்பவர் எஸ்ஐஆர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் பியூனாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அனீஷ் ஜார்ஜ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். எஸ்ஐஆர் பணிச்சுமை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். அனீஷ் ஜார்ஜின் அக்காள் கணவரான ஷைஜு கூறியது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக அனீஷ் ஜார்ஜுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தது. குறிப்பிட்ட நேரத்திற்குள் பணியை முடிக்க முடியுமா என்ற பதற்றத்தில் அவர் இருந்தார். மகனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூட அவருக்கு நேரம் கிடைக்க வில்லை. இதற்கிடையே பல அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் கடும் நெருக்கடி கொடுத்து வந்தனர் என்றார்.

இதற்கிடையே எஸ்ஐஆர் பணிகள் காரணமாக வேலைப்பளு அதிகமாக இருப்பதாக கூறி கேரளா முழுவதும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிஎல்ஓக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அலுவலகம் முன்பும், மாநில தலைமை தேர்தல் ஆணையாளர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடைபெற்றது. எஸ்.ஐ.ஆர் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு: இதற்கிடையே முஸ்லிம் லீக் கட்சி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் சூழலில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று கோரி உள்ளது.

Advertisement