தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழநி-கொடைக்கானல் சாலையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: வனத்துறை கண்காணிக்க கோரிக்கை

 

Advertisement

பழநி: பழநி-கொடைக்கானல் மலைச்சாலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வனத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென வனஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பெரிய வனப்பரப்பைக் கொண்டது பழநி வனச்சரகம். இந்த வனச்சரகத்தில் யானை, வரிப்புலி, சிறுத்தை, கரடி, மான், கேளையாடு, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட அரிய வகை விலங்குகளும், சந்தனம், தேக்கு, ஈட்டி போன்ற விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகை செடிகளும் அதிகளவில் உள்ளன. பழநி வனச்சரகத்தின் வழியாக கோடை வாஸ்தலமான கொடைக்கானலுக்கு செல்லும் மலைச்சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் பசுமை நிறைந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. இது வாகனங்களில் பயணிப்போருக்கு ரம்மியான சூழலை ஏற்படுத்தும்.

இந்நிலையில் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் மலைச்சாலையில் அமர்ந்து மது அருந்துவது, புகைப்பிடிப்பது, உணவு கழிவுகளை வீசுவது, பிளாஸ்டிக் பொருட்களை தூக்கி எறிவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் வனப்பகுதியில் சுற்றித்திரியும் வனவிலங்குகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகின்றன. இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘‘சுற்றுலா பயணிகள் தூக்கி எறியும் பாட்டில்கள் உடைவதால், அதனை மிதிக்கும் வனவிலங்குகள் காயமடைகின்றன. சுற்றுலா பயணிகள் வீசிஎறியும் உணவுகள் உண்ணும்போது வனவிலங்குகள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றன. சுற்றுலா பயணிகள் வீசி எறியும் பிளாஸ்டிக் பொருட்களால் மண்ணின் தரம் மாசடைகிறது. புகை பிடித்து விட்டு வீசும்போது, சருகுகளில் தீப்பற்றி, வனத்தீ உண்டாகிறது.

எனவே, சுற்றுலா பயணிகள் மலைச்சாலையில் செல்லும்போது மது அருந்தக்கூடாது. புகை பிடிக்கக் கூடாது. விலங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது. தண்ணீர் பாட்டில் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லக்கூடாதென அறிவுறுத்தி வருகிறோம். சோதனையும் மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஆனால், சுற்றுலா பயணிகளிடமும் சுய விழிப்புணர்வு மற்றும் அக்கறை இருக்க வேண்டும்’’ என்றனர்.

Advertisement

Related News