தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விமானத்தில் வந்தபோது திடீர் மாரடைப்பு சிகிச்சைக்காக சென்னை வந்த வங்கதேச பெண் பலி

சென்னை: வங்கதேசத்திலிருந்து, புற்றுநோய் சிகிச்சைக்காக, விமானத்தில், சென்னைக்கு வந்து கொண்டிருந்த, வங்கதேச பெண், விமானம் நடுவனில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.

Advertisement

வங்கதேசத்தின் டாக்காவில் இருந்து, தனியார் விமானம் நேற்று சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த அக்லிமா அக்தர் (32) என்ற பெண்ணை, நுரையீரல் புற்றுநோய்க்காக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், சிகிச்சை பெறுவதற்காக அழைத்து வந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அந்தப் பெண் திடீரென மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார். உடனடியாக விமான பணிப்பெண்கள், விமானிக்கு அவசரமாக தெரிவித்தனர்.

இதை அடுத்து விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, பயணி ஒருவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால், விமான நிலைய மருத்துவக் குழுவினர், தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதும், மருத்துவ குழுவினர் விமானத்துக்குள் ஏறி, பெண்ணை பரிசோதித்தனர். ஆனால் அந்தப் பெண், விமான இருக்கையில் சாய்ந்த படி, உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். இதை அடுத்து மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக,அவர் உயிரிழந்ததாக அறிவித்தனர். சென்னை விமான நிலைய போலீஸ் விரைந்து வந்து, பெண்ணின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Advertisement

Related News