தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீரபாண்டி பகுதியில் பன்றிகளால் நெல் விவசாயம் பாதிப்பு

 

Advertisement

தேனி: தேனி அருகே வீரபாண்டி பகுதியில் இரண்டாம் போக நெல் விவசாயத்திற்காக நெல்பாவும் பணி துவங்கியுள்ள நிலையில், இப்பகுதியில் வளர்ப்பு பன்றிகளால் நெல்பாவும் பணி பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணை பாசன நீரினைக் கொண்டு தேனி அருகே வீரபாண்டி அருகே உப்பார்பட்டி பகுதியில் சுமார் 400 ஏக்கர் நிலத்தில் நெல் விவசாயம் நடந்து வருகிறது. தற்போது இப்பகுதியில் முதல்போக விவசாயம் முடிந்து நெல் அறுவடை பணிகள் முடிந்ததையடுத்து, இரண்டாம் போக விவசாயப் பணிகள் துவங்கியுள்ளது. இரண்டாம் போகத்திற்காக இப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் நெல்பாவும் பணியை துவங்கியுள்ளனர்.

இந்நிலயில், இப்பகுதியில் சிலர் வளர்த்து வரும் வளர்ப்பு பன்றிகள், நெல்பாவிய வயல்களுக்குள் இறங்கி நெல்மணிகளை தின்று விவசாயத்தை பாழ்படுத்தி வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறும்போது, நெல்பாவும் நிலங்களுக்குள் சிலர் தங்களது வளர்ப்பு பன்றிகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இந்த பன்றிகள் நெல்பாவிய வயல்களுக்குள் சென்று பாவிய நெல்மணிகளை தின்று விவசாயத்தை பாழ்படுத்தி வருகிறது. இதனால் மீண்டும் நெல்மணிகளை பாவும் பணியை தொடங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, வயல்பகுதிக்குள் வளர்ப்பு பன்றிகள் மேய்ச்சலுக்கு விடுவதை கட்டுப்படுத்த அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement