தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிலிப்பைன்சின் கூட்டு கடற்படை பயிற்சி எதிரொலி தென் சீனா கடலில் சீன ராணுவ விமானங்கள் ரோந்து

பீஜிங்: பிலிப்பைன்ஸ், அமெரிக்கா,ஜப்பான் நாடுகளுடன் சேர்ந்து கூட்டு கடற்படை பயிற்சியை மேற்கொண்டதற்கு எதிராக தென் சீன கடலில் சீன குண்டு வீச்சு விமானங்கள் தீவிர ரோந்து கண்காணிப்பை மேற்கொண்டன. தென் சீன கடலின் 90% பகுதிக்கு சீனா உரிமை கோருகிறது. பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, தைவான் மற்றும் புருனே நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

Advertisement

பிலிப்பைன்ஸ் கடற்படை அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் கூட்டு சேர்ந்து இரண்டு நாள் கூட்டு கடற்படை பயிற்சியை நடத்தியது. ஜப்பான், அமெரிக்க நாடுகளும் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டன. நேற்றுமுன்தினம் இந்த பயிற்சி நடந்த நிலையில் சீன ராணுவத்தின் குண்டு வீச்சு விமானங்கள் சர்ச்சைக்குரிய தென் சீன கடலில், நேற்று தீவிர கண்காணிப்பு ரோந்து பணியை மேற்கொண்டன.

சீன ராணுவத்தின் தெற்கு கட்டளை பிரிவின் செய்தி தொடர்பாளர் டியான் ஜூன்லி வெளியிட்ட அறிக்கையில், ந்த நாடுகளின் நடவடிக்கை தென் சீனா கடலில் சீனாவின் இறையாண்மைக்கு விடுத்த நேரடி சவாலாகும். வெளிநாட்டு ராணுவ நடவடிக்கைகளை தடுப்பதற்கும், அதன் பிராந்திய உரிமை கோரல்களை வலுப்படுத்துவதற்கும் சீனாவின் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. இது போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டு, பதற்றங்களை உருவாக்குவதை பிலிப்பைன்ஸ் நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News