தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிலிப்பைன்சில் கல்மேகி புயலுக்கு 66 பேர் பலி: 26 பேர் மாயம்

மணிலா: மத்திய பிலிப்பைன்சில் வீசிய கல்மேகி புயலுக்கு 66 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 26 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டை கல்மேகி என்ற சூறாவளி தாக்கியது. இதன் காரணமாக பல்வேறு மாகாணங்களிலும் கனமழை பெய்தது. இந்நிலையில் புயல், மழை வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக செபு மாகாணத்தில் பெரும்பாலான உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. திடீர் வெள்ளப்பெருக்கினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement

குடியிருப்புக்களை வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டின் மேற்கூரைகளில் ஏறி தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளத்தில் ஏராளமான கார்கள் அடித்துச்செல்லப்பட்டன. செபு மாகாணத்தில் மட்டும் மழை, வெள்ளத்துக்கு 49 பேர் பலியாகி உள்ளனர். காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 26 பேரில் 13 பேர் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகின்றது.

Advertisement

Related News