தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிலிப்​பைன்ஸை தாக்​கிய கல்​மேகி புயலுக்கு 188 பேர் உயி​ரிழப்பு : அவசரநிலை பிரகடனம்

மணிலா: மத்திய பிலிப்பைன்சில் வீசிய கல்மேகி புயலுக்கு 188 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 127 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டை கல்மேகி என்ற சூறாவளி தாக்கியது. இதன் காரணமாக பல்வேறு மாகாணங்களிலும் கனமழை பெய்தது. இந்நிலையில் புயல், மழை வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீர் வெள்ளப்பெருக்கினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் நீக்​ரோஸ் ஆக்​சிடென்​டல், செபு உள்​ளிட்ட மாகாணங்​கள் வெள்​ளக் காடாக மாறின. இ​தில் சாலைகளில் நிறுத்​தப்​பட்​டிருந்த கார்​கள், ஆற்​றங்​கரையோர வீடு​கள், பெரிய அளவி​லான கப்​பல் கன்​டெய்​னர்​களும் கூட வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டன.

Advertisement

பிலிப்​பைன்ஸ் இந்த ஆண்டு எதிர்​கொண்ட பேரிடர்​களில் மிக மோச​மான பேரிட​ராக இது கருதப்​படு​கிறது. இந்​நிலை​யில் பிலிப்​பைன்ஸ் மத்​திய பிராந்​தி​யத்​தில் கல்​மேகி புயலுக்கு 188 பேர் உயி​ரிழந்​தனர். இவர்​களில் பெரும்​பாலானோர் வெள்​ளத்​தில் மூழ்கி இறந்​தனர். 127 பேரை காண​வில்​லை.கல்​மேகி புய​லால் சுமார் 20 லட்​சம் பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். ஏற்​கெனவே நிவாரண முகாம்​களில் தங்க வைக்​கப்​பட்​டுள்ள 4,50,000 பேர் உட்பட 5,60,000 பேர் இடம் பெயர்ந்​துள்​ளனர். இந்​நிலை​யில் பிலிப்​பைன்ஸ் அதிபர் பெர்​டி​னாண்ட் மார்​கோஸ் ஜூனியர் நேற்று அந்​நாட்​டில் அவசர நிலையை பிரகடனம் செய்​தார். அவசர நிதியை அரசு விரை​வாக வழங்​க​வும், உணவுப் பதுக்​கல், அதிக விலை நிர்​ண​யம் ஆகிய​வற்றை தடுக்​க​வும் இது உதவும் என கூறப்​படு​கிறது.

Advertisement

Related News