தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இனி பி.எஃப். பணத்தை ஏ.டி.எம்-மிலேயே எடுக்கலாம்: தீபாவளிக்கு முன் அமலுக்கு வருமா?: ஒன்றிய அரசு திட்டம்!!

டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை ஏடிஎம் மூலம் பெறும் வசதியை தீபாவளிக்குள் நடைமுறைக்கு கொண்டுவர ஒன்றிய அரசு திரட்டமிட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் தங்கள் பி.எஃப். கணக்கில் இருந்து திருமணம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக முன்பணம் பெறமுடியும். இதனை பெறுவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்த EPFO 3.O என்ற பெயரில் புதிய அம்சங்களை ஒன்றிய அரசு கொண்டுவர உள்ளது. அதன்படி, அவசர தேவையின் போது ஏடிஎம் மூலம் பி.எஃப். பணத்தை பெறும் வகையில் மாற்றம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

இதுதொடர்பாக டெல்லியில் அடுத்த மாதம் 10ம் தேதி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. பி.எஃப். பணத்தை ஏடிஎம் மூலம் பெறும் வசதிக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொழிலாளர் வைப்பு நிதியை யுபிஐ மூலம் உடனடியாக பயனர்களின் கணக்கிற்கு அனுப்பும் அம்சங்களையும் கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.1,000லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்துவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement