தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

7 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க தலைவர் அதிரடி கைது: சிறையில் இருந்து வந்தவர் சுற்றிவளைப்பு

நெல்லை: நெல்லை தச்சநல்லூர் எஸ்ஐ மகேந்திரகுமார் தலைமையிலான போலீசார் கடந்த அக்டோபர் 11ம் தேதி, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஊருடையார்புரம் பகுதியில் ஒரு கும்பலை விசாரித்தனர். அக்கும்பல் போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஹரிஹரன், அருண்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

இதை கண்டித்து அருண்குமாரின் தம்பி அஜித்குமார், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தச்சநல்லூர் போலீஸ் நிலையம் அருகே, புதுக்குளம் விநாயகர் கோவில், சுப்புராஜ் மில் செக்போஸ்ட், தென்கலம் அணுகுசாலை சந்திப்பு, சங்கர் நகர் வங்கி, கரையிருப்பு விலக்கு உள்ளிட்ட 7 இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதுதொடர்பாக அஜித்குமார் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களின் பின்னணியில் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத் தலைவரான தச்சநல்லூர் கண்ணபிரான் இருப்பதாக கூறி அவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், திருச்சி போலீசார் கைது செய்த வழக்கில் கடலூர் சிறையில் இருந்து நேற்று வெளியே வந்த கண்ணபிரானை நெல்லை தனிப்படை போலீசார், கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News