தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாமக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (46), பாமக பிரமுகர். இவரது 17 வயது மகன், பண்ருட்டியை அடுத்த அங்குசெட்டிபாளையத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், கல்லூரியில் குப்புசாமி மகன் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்படவே கல்லூரி வாசலில் நின்றிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் குப்புசாமி மகன் தனது வீட்டுக்கு வந்து விட்டார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில், பைக்கில் வந்த மர்ம நபர்கள் திடீரென குப்புசாமி வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பினர். அவர்கள் வீசிய பெட்ரோல் குண்டு குப்புசாமி வீட்டின் எதிரில் இருந்த கொய்யா மரத்தின் மீது விழுந்து மரம் தீப்பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு குப்புசாமி குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதுதொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News